கடவுள் நேற்று முளைத்த காளானா...

எனது மற்றைய வலைப்பதிவிலே மறைந்துவரும் தமிழர் சம்பிரதாயங்கள். எனும் இடுகையிலே தமிழர் சம் பிரதாயங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தேன். அதிலே இந்துக்களின் சமய சம்பிரதாயங்களோடு கூடிய ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த இடுகைக்கு நண்பர் வால்ப்பையன் தனது பின்னூட்டத்திலே பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

வால்பையன் சொன்னது…

தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!
தமிழ் கல் தோன்றி மண் தோண்றா கால்த்திலிருந்து இருக்கிறது!
கடவுள் நேற்று முளைத்த காளான்!
August 7, 2009 8:06 AM

இவரது இக் கருத்துக்குரிய விளக்கத்தினை தனி ஒரு இடுகையாகத் தருவதாக சொல்லியிருந்தேன்.

எந்த ஒரு இனத்தினையோ, சமுகத்தினையோ எடுத்துக் கொண்டால் அவர்களின் சம்பிரதாயங்கலிலே எதோ ஒரு வகையில் சமயம் என்பது செல்வாக்குச் செலுத்துகின்றது.

தமிழ்மொழி என்பது சிறப்பான ஒரு மொழி. வால்ப்பையன் சொல்வதனைப்போல் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முற்பட்டது தமிழ் மொழி என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

இந்து சமயத்தைப் பொறுத்தவரை இந்து சமயம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று. இவ்வாறு இந்து மதம் ஆதியும், அந்தமும் (தொடக்கமும், முடிவும்) இல்லாத ஒரு மதமாக இருக்கின்றபோது இந்து மதத்திலே இருக்கின்ற கடவுளர்கள் எப்படி நேற்று முளைத்த காளானாவது என்பது எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியவேண்டிய அவசியமுமில்லை.

தமிழர்களுக்கென்றே தனித்துவமான பல சம்பிரதாயங்கள் இருக்கின்றன. இன்று அவற்றில் பல சம்பிரதாயங்கள் மறைந்து வந்தாலும் சில சம்பிரதாயங்கள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த சம்பிரதாயங்களுக்கும் தமிழர்கள் சார்ந்த மதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றன.

அதிலும் இந்து மதத்தினைப் பின்பற்றுகின்ற தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் சம்பிரதாயங்கள் இந்து மதத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக இருக்கின்றது.

இந்து மதத்திலே இருக்கின்ற சம்பிரதாயங்களுக்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன. அதேபோல் அந்தச் சம்பிரதாயங்களிலே அதிக நம்பிக்கையும் கொண்டவர்கள்தான் இந்துக்கள்.

அதே போன்றுதான் ஏனைய மதத்தினைப் பின்பற்றுகின்றவர்களும், தமது கடவுள் மீது அதிக நம்பிக்கையும் வைத்து இருக்கின்றனர். கடவுள் நேற்று முளைத்த காளான் என்று சொல்வது சொல்பவர்களின் அறியாமைதான். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட இப்படிச் சொல்லமாட்டார்கள். எந்த ஒரு மதமும் தாங்களின் மதம் நேற்றுத்தான் உதயமானது என்று சொல்லவில்லை.

தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பின்பற்றுகின்ற மதம் சார்ந்ததாகவே அவர்களின் சம்பிரதாயங்களும் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அவர்களது மதத்தோடு தொடர்புபட்டே அந்தச் சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.

தமிழர்களிடையே அதிகம் இடம் பெறுகின்ற நிகழ்வுகளைப் பாருங்கள் அந்த நிகழ்வுகள் அவர்கள் பின்பற்றுகின்ற சமயம் சார்ந்திருப்பதனை காணலாம். உதாரணமாக திருமணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்துக்களின் சம்பிரதாயத்துக்கும் கிறிஸ்தவர்களின் சம்பிரதாயத்துக்கும் எவ்வளவே வேறுபாடு இருக்கின்றது.

இங்கே சமயம் சார்ந்ததாக அந்தச் சம்பிரதாயங்கள் அமையவில்லையா. சமயம் சார்ந்ததாக சம்பிரதாயங்கள் இல்லை என்றால் ஏன் இந்துக்களின் திருமண சம்பிரதாயத்துக்கும் கிறிஸ்தவர்களின் (இங்கு கிறிஸ்தவர்கள் எனும்போது கிறிஸ்தவ மதத்தினை பின்பற்றும் தமிழர்கள்) சம்பிரதாயத்துக்கும் வேறுபாடு இருக்கின்றது. இரண்டு மதத்தவர்களும் தமிழர்கள்தானே. இங்கே மதம் சார்ந்ததுதான் சம்பிரதாயம் என்பது புலப்படுகின்றதல்லவா?

இன்னும் உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். சம்பிரதாயங்கள் தமிழ் மக்களின் சமயங்களோடு பின்னிப்பிணைந்து விட்டது என்பதே உண்மை. இந்துமத கடவுளர்களோ, ஏனைய கடவுளர்களோ நேற்று முளைத்த காளான்கள் இல்லை என்பதும் உண்மையே.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். உங்கள் கேள்விகள் வரும்போது பின்னூட்டத்தில் விளக்கம் தருகிறேன்.

இதற்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் இங்கு (http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html) வந்து தெரிவிக்கலாம்.

0 கருத்துகள்: