பேசாத பிள்ளைகளை பேச வைப்பவர்


கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயங்களிலே ஒன்றாகத் திகழும் மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் பெருமைகளைக் சொல்லும் பாடல்களை தருகின்றேன்.

முக்கண்ணனார் புத்திரனே வா விநாயகா
முதற்பொருளே மூத்தவனே  கேள்  விநாயகா
முக்கனி தேன் சக்கரை பால் வா விநாயகா
முத்தமிழால் உனைத் தொழுவோம் கேள் விநாயகா

அறுகம்புல்  மலரென்றவரே வா விநாயகா
அழகாக அமர்ந்திருந்து கேள் விநாயகா
வறுமை பிணி துயர் போக்க வா விநாயகா
பொறுமையுடன் எம் குறையைக் கேள் விநாயகா


சோதி லிங்கமானவரே வா விநாயகா
சுயம்புவென வந்தவரே கேள் விநாயகா
ஆதி சக்தி நாயகரே வா விநாயகா
ஆலமுண்டன் தன மகனே கேள் விநாயகா


களுதாவளைப் பொங்கலுன்ன வா விநாயகா
பிள்ளையாரின் கதை படிப்போம் வா விநாயகா
களுதாவளைத் திர்த்தமாட வா விநாயகா
கனி ரசம் போல்  ஊஞ்சலிசை கேள்  விநாயகா

2 கருத்துகள்:

  1. Menaga Sathia says

    நல்ல பகிர்வு!!


    hayyram says

    வினாயகரின் படங்கள் அருமை. நன்றி.

    anbudan
    ram

    www.hayyram.blogspot.com